செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள்.
அப்பொழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; வாழ்வைப் பற்றிய வார்த்தைகளை வழங்க ஏந்தி நின்று, உலகில் சுடர்விடும் விண்மீன்கள் எனத் துலங்குவீர்கள்.
வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சான்றாய் நின்று, கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையச் செய்வீர்கள்.
Philippians 2:14-16a